எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் அனைவரும் மிக அவதானத்துடன் செயற்படுத்துமாறு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய புத்தாண்டு காலப்பகுதியில் செய்யப்பட்டதை போன்று மக்கள் செயற்பட வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு பொறுப்பற்ற முறையில் பொதுமக்கள் செயல்படுவதால் கொவிட் அலை மீண்டும் உருவாவதற்கான சாத்தியங்கள் காணப்படும் என்பதுடன் அதனை தடுக்க முடியாமல் போய்விடும்.
அத்துடன் நாடு முழுமையாக திறக்கப்பட்டதன் பின்பு குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் ஆகும் வரை சுகாதார சட்டத்தை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் நாட்டில் திறப்பது தொடர்பில் எனக்கு சில ஆலோசனைகள் வழங்குவார்.
தற்போது கொவிட் தொற்று மகிழ்ச்சிகரமான நிலைமையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் கொவிட் தொற்று பரவல் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.