இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

0

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 29,616 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 76 ஆயிரத்து 319 ஆக உயர்ந்தது.

அவ்வாறு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,46,658 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply