வேம்பு என்று அழைக்கப்படும் வேப்ப மரத்தின் இலை மற்றும் பட்டைகள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
வேப்ப மரக் குச்சியை மெல்லும் போது அதில் உள்ள எதிர்ப்புப் பண்புகள் உமிழ்நீருடன் கலந்து வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை கொல்லும்.
மேலும், இது பற்களில் பாக்டீரியா சேர்வதையும் தடுக்கிறது.
உங்களின் விரல் அளவு உள்ள சிறு வேப்பங்குச்சி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் மேல் உள்ள அதன் தோலை உரித்து விட்டு, ஒரு முனையை மென்று அதனை பிரஷ் போல ஆக்கிக் கொள்ளுங்கள்.
அதனைக் கொண்டு உங்களின் பற்களை துலக்குங்கள். ஈறுகளிலும் அந்த குச்சியைக் கொண்டு சிறுது நேரம் துலக்கி விட்டு, பின் உங்களின் வாயைக் கொப்பளித்தால் போதும்.[