மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ள 22 கோடி தடுப்பூசிகள்!

0

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் கொவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருகின்றது.

இதற்கமைய அடுத்த மாதம் மத்திய அரசுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் 21 கோடியே 90 லட்சத்துக்கு கோவில்ஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் மத்திய அரசுக்கு சீரம் நிறுவன இயக்குனர் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

“இந்நிலையில் குறித்த கடிதத்தில் தடுப்பூசி உற்பத்தித் திறனை நாங்கள் அதிகரித்து உள்ளோம்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மத்திய அரசுக்கு இதுவரை அறுபத்தி ஆறு கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறோம்.

ஏற்கனவே பெற்ற ஆர்டரின் படி இந்த டிசம்பர் 31ம் திகதிக்குள் 66 கோடி தடுப்பூசியை வழங்குவோம்.

இத்துடன் இந்த ஆண்டு 130 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கிய பெருமையை அடைவோம் “என்றும் குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply