நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்தச்சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று.

0

நாடாளுமன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்தச்சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது.

இதன் போது வர்த்தகர்கள், கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிகமான விலைக்கு உணவுவகைகளை விற்பனை செய்பவர்கள் ஆயின் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரையில் அதிகரிக்க குறித்த திருத்தச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அந்த சட்டம் மூல விவாதத்திற்கு உற்படுத்தி , நிறைவேற்றப்படவுள்ளதாக விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply