உலக நாடுகளில் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதன் காரணத்தால் சில நாடுகளுக்கிடையிலான பயண தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அமெரிக்க அரசாங்கமும் குறித்த கட்டுப்பாட்டை விதித்திருந்த நிலையில் தற்போது அந்தக் கட்டுப்பாடுகளை நிபந்தனையுடன் நீக்கியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அனைத்து நாடுகளிலுமுள்ள பயணிகள் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இவ்வாறு வரும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.