இணைய வழிக் கற்பித்தல் செயற்பாடுகளை முனெடுத்த ஆசிரியர்களுக்கு மாத்திரம் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் அதிபர் ஆசிரியர்களின் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றும் நிறுபம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு இந்த ஆண்டு நடைபெறவுள்ள கா.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பப் பத்திரங்களை மாத்திரம் அனுப்பி வைப்பதற்கு அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் நிறைவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் பத்திரங்களை அனுப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.