குளத்தில் நீராடுவதற்கு சென்ற இருவர் சடலமாக மீட்பு!

0

குளத்தில் நீராடுவதற்கு சென்று காணாமல் போயிருந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் வட்டவள- லொனக் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் 21 மற்றும் 38 வயதினையுடைய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இருவரும் தனது நண்பர்களுடன் குளத்தில் நீராட சென்றிருந்த வேளை நேற்று மாலை காணாமல் போயிருந்தனர்..

இந்நிலையில் அவர்களது சடலங்களை காவல்துறையினரும் பிரதேச மக்களும் இணைந்து மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply