இலங்கையின் பல பாகங்களிலும் இன்று கூடிய மழை!

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும்.

அவ்வாறு நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற் பரப்புகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்குதல் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply