பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரை தகாத வார்த்தைப் பிரயோகங்களால் தூற்றி, அவர்களைத் தாக்க முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் மரண வீடு ஒன்றில் கலந்துகொண்டபோது முகக்கவசம் அணிய மறுத்து உள்ளார்.
இந்நிலையில் அந்த நபரை பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து சுகாதார பரிசோதகர்களை சந்தேகநபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, பொல்லால் தாக்க முயன்றுள்ளனர்.
அந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



