இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கலும் பல தடவைகள் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழை பெய்யும்.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும்.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றனர்



