ஆசிரியர்களுக்கான 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு!

0

ஆசிரியர்களுக்கான 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத வேதனத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் இரமேஷ் பாத்திரரே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் குறித்த விடயம் தொடர்பில் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் அசாதாரண சூழ்நிலை காரணத்தால் பொருளாதார தாக்கத்தினால் அதிபர்களின் வேதனை முரண்பாட்டினை முழுமையாகத் தீர்ப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

இதன் பிரகாரம் அடுத்த பாதீட்டின் மூலம்அவர்களது முரண்பாட்டினை அ தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply