கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இரு நபர்கள் அதிரடிக் கைது!

0

சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இரு நபர்கள் அதிரடிக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் சென்னையிலிருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரின் தனிப்பட்ட கைபைகளில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply