இலங்கையில் கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகின்ற நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் குறித்த தொற்றுப் பரவல் முழுமையாக குறைவதற்கான சந்தர்பம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்திர நேற்றைய தினம் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே தெரிவித்திருந்தார்.