உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

0

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்கள் 330க்கு அவசியமான உலர் உணவுப்பொருட்கள் இன்று திருகோணமலை ஜயடெப மன்றத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவிடம் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது

இவ்வுலர்வுணவுப்பொருட்கள் மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இம்மன்றம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடராக பல உதவிகளை வழங்குவதாக தெரிவித்ததாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இவ்வுலர்வுணவுப்பொருட்களை திருகோணமலை ஜயசுமனராம விகாரையின் விகாரதிகாரி ஞானகித்தி தேரர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தார் என்பதும் குறிப்பிடதக்கது

Leave a Reply