அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை வினியோகிக்க சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தினரால் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே கூட்டுறவு சேவைகள், மேம்பாட்டு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறித்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய தினம் இணக்கப்பாட்டுக்கு அமைவான கடிதம் வர்த்தக அமைச்சிடம் கையளிக்க அவர்கள் இணங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.



