மற்றுமொரு வெள்ளி பதக்கத்தை வென்ற இந்தியா!

0

மாற்றுத் திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைய இன்றைய தினம் இடம்பெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில் பிரிட்டன் வீரருடன் கடும் போட்டி நிலவிய நிலையில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன் குமர் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

அத்துடன் இவர் 18 வயதினை உடைய உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.

மேலும் பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீற்றர் உயரம் தாண்டி பிரிட்டன் வீரர் ஜோனதன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

நடப்பு பாராலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி,3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply