புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் அதிரடிக் கைது!

0

கடந்த 24 மணி நேரமும் இங்கையில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மின்னேரியா காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட அனுமதிப்பத்திரம் இல்லாமல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சிலரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த அகழ்வு பணிகள் ஹபரணை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து புதையல் எடுக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேரும் தோண்டுதல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply