ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70 வது ஆண்டு நிறைவு விழா இன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய சூம் தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த ஆண்டு விழாவை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினாலேயே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு குறித்த நிகழ்வு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.