யாழ் கைதடி அரச முதியோர் இல்லத்தில் 41 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

0

யாழ் கைதடி அரச முதியோர் இல்லத்தில் உள்ள 41 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியரை கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முதியோர் இல்லத்தில் உள்ள சிலருக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவர்களில் 45 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பரிசோதனையின் மூலம் அந்த முதியோர் இல்லத்தின் இரண்டு பணியாளர்கள் உள்ளிட்ட 41 பேருக்கு இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply