வார இறுதி நாட்களில் அத்தியாவசிய கடைகள் தவிர ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்!

0

கோவை மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் அனைத்து துணி, மால், நகைக் கடைகள் மற்றும் பூங்காக்கள் என்பன இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய அத்தியாவசிய கடைகள் தவிர ஏனைய அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உணவகங்கள் அனைத்தும் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளருடன் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலமையினை கட்டுப்படுத்துவதற்கே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply