இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடையில் விலையில்லா அரிசி!

0

தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றது.

அத்துடன் இலங்கை தமிழர்கள் வசிப்பதற்காக தமிழகத்தில் பல இடங்களில் அகதிகள் முகாம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாம்களில் இலங்கையிலிருந்து வந்த அகதிகள் வசித்து வருகின்றார்கள்.

இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீடுகள் சாலை தேசம் அடைந்திருப்பதாக ஏற்கனவே பல புகார்கள் கிடைக்கப்பெற்றன.

அத்துடன் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளின் குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் திண்டாடினார்கள்.

ஆகவே இலங்கை தமிழர்களின் முகாம்களை மேம்படுத்தவும் அவர்களுக்கு நல உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடையில் விலையில்லா அரிசி வழங்கப்படும்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 கோடி வழங்கப்படும் என்பதுடன் கல்விக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply