திருகோணமலை சீனக்குடா காவற்துறை பிரிவு பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்றும் இயந்திரத்துடன் இனந்தெரியாத நபர்களினால் நேற்று சீனக்குடா , சின்னம் பிள்ளைச் சேனை கடற்கரைப் பகுதியில் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவ மொன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து சீனக்குடா காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர் பாதுகாபாபு , மற்றும் திருகோணமலை பட்டனமும் சூழலும் ஆகியோரின் அனுமதியினைப் பெற்று மேற்கூரை மற்றும் சொகுசு இருக்கைகளை அமைத்து இப் பயணச் சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இவரோடு தனிப்பட்ட விரோத காரணமாக இடம் பெற்றிருக்கலாமென காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீனக்குடா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.