கிண்ணியாவில் சேதனப் பசளை தயாரிக்கும் நிகழ்வு!

0

ஜனாதிபதியின் எண்ணக் கருத் திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவினை வழங்கும் நக்கில் கிண்ணியா பிரேதச சபையின் வழிகாட்டலில் சேதன பசளை தயாரிக்கும் நிகழ்வு அரை ஏக்கர் பகுதியில் கழிவு அகற்றல் நிலையத்தில் பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் அண்மையில் நடை பெற்றது

சேதனப் பசளை தயாரிப்பது சம்மந்தமாக. விவசாய போதனாசிரியர் நிஹாஸ் இதன் போது விளக்கமளித்தார்.

இச் சேதனப் பசளை தயாரிக்கப் பட்டு விவசாயம் செய்வோருக்கு விற்பனை செய்யப் படவுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் இதன் போது தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார்,உப தவிசாளர் ஏ.எச் .எம். பாசித், செயலாளர் எஸ். அஸ்வத்கான்,உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.அனஸ் மற்றும் விவசாய போதனாசிரியர் நிஹாஸ்ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்

Leave a Reply