கொவிட்19 பாதுகாப்பு தொடர்பிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
குறித்த பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
திருகோணமலை பொது வைத்தியசாலை மற்றும் நிலாவெளி கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன.
இதில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர் டாக்டர் .ரவிச்சந்திரன் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.