கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!

0

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு புனித தந்தத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு புனித தந்தத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தேல அவர்கள் வரவேற்றார்.

அத்துடன் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இறுதி ரந்தோலி பெரஹெரா நேற்றைய தினம் வீதி உலா வந்தது.

இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அயோமா இராஜபக்ஷ அம்மையார் ஆகியோர் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பு இருந்து பெரஹரவைப்பார்வையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply