இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் நிஹால் அபிஷேங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அனைத்து நிபுணர்களிடமும் பேசுவதாகவும் மருத்துவர் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி மாத்திரம் போதாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்க முயன்றதனால் தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை நாங்கள் தவறி விட்டோம் என்றும் அவ்வாறு தான் அந்த இழப்புக்கள் நிகழ்ந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.