2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு!

0

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதன் காரணத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமையஇன்று ஆரம்பமாகும் வாரத்தில் குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளில் இதுவரை எந்தவித கொடுப்பனவையும் பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் இதற்கு தகுதியுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர் விசேட தேவையுடையோர் ஆகிய இந்த அரசாங்க கொடுப்பனவுகளை பெறுவோருக்கு குறித்த நிவாரணம் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களின் பெயர் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply