கண்டி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளுக்கு அமைய இன்று இடம்பெறும் என மத்திய சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த மாவட்டத்தில் மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கும் திட்டம் குறித்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய குறித்த திட்டத்தினை அடுத்து வரும் நாட்களில் முன்னெடுத்துச் செல்வது நோக்கம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளச் செல்லும் மக்கள் முதல் டோஸ் ஏற்றப்பட்ட போது கிடைத்த தடுப்பூசி அட்டையை அனுமதி பத்திரமாக பயன்படுத்தி தடுப்பு மருந்து ஏற்றல் நிலையங்களுக்கு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply