நாட்டின் பல பாகங்களிலும் இன்று கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மேல் சப்பிரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பைய கூடிய சந்தர்ப்பம் நிலவுகின்றது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யும்.
அவ்வாறு சில மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.



