செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளுராட்சித் தேர்தலை நடத்த தீர்மானம்!

0

தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளதால் உள்ளூராட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய 9 மாவட்டங்களில் தேர்தல் நடை பெறாமல் உள்ளன.

இந்நிலையில் குறித்த மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளுராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பிரகாரம் 9 மாவட்டங்களுக்கும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையகம் தயாரானது.

தற்போது அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் திகதி செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply