இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு!

0

இலங்கை ரூபாவின் மதிப்பை குறைப்பதற்கு உரிமம் பெற்ற வங்கிகள் கூறியதாக வெளியான தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை என இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய செலவாணி வீதத்தினை நிர்ணயிப்பதில் மீதான நிலை அல்லது தொழிற்பாடு ரீதியான ஏற்பாடுகளுக்கு மத்திய வங்கி எந்த ஒரு மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.

இருப்பினும் தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பரவும் குறித்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள்அனைவரும் குறித்த விடயம் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply