இலங்கையில் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை!

0

இலங்கையில் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணத்திலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பொது மக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply