பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!

0

கல்வி துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 தொலைக்காட்சி அலைவரிசைகள் ,ஆறு புதிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் ஒரு வானொலி அலைவரிசைகள் என்பன அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று ஊடக அமைச்சில் நடைபெற கூட்டத்தில் உரையாற்றிய போதே இவர் ‘விஷன் எஃப்எம்’ வானொலி நிலையம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

குறித்த கல்வி அலைவரிசைகள் PEO TV மூலம் இலங்கை டெலிகொமுடன் இணைந்து செயல்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள், சுகாதார நெருக்கடிகள் மற்றும் ஆசிரியர் வேதன முரண்பாடு போன்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும் மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply