யாழில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இடைநிறுத்தம்!

0

நாட்டில் தற்போது கொரோனா அபாயம் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க யாழ் பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலயத்தின் வருடாந்த ஆவணி மகோற்சவத்தை நடத்த முடியாத நிலை காணப்படுவதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 அச்சுறுத்தல் நிலை காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

அத்துடன் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த மகோற்சவ பெருவிழா நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply