தொடரும் சீரற்ற காலநிலை – 71 பேர் பரிதாப உயிரிழப்பு!

0

வட இந்தியாவில் பல மாநிலங்களில் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  அதேபோல் மின்னல் தாக்கத்தினால் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசத்திலும், மின்னல் தாக்கத்தினால் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அலகாபாத்தில் 14 பேரும், ஜெய்ப்பூரில் 12 பேரும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply