மூன்றாவது முறையாக கொவிட் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அனுமதி வழங்கிய நாடு!

0

அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் மூன்றாவது முறையாக கொவிட் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு மூன்றாவது முறையாகவும் குறித்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினரால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவினால் மாற்று சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் புற்று நோயால் 10 மில்லியன் பேர் வரையில் பாதிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொவிட் பரவலுக்கு எதிராக மூன்றாவது முறையாக கொவிட் தடுப்பூசிகள் தேவைப்படலாம் என அமெரிக்க சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

சில நாடுகளில் மூன்றாவது முறையாகவும் குறித்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply