தனியார் துறையினரால் கொவிட் 19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அறவிடக்கூடிய கட்டணம்!

0

கொவிட் 19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தனியார் துறையினரால் அறவிடக்கூடிய உச்ச பட்ச கட்டணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த தகவலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அதிகபட்சமாக 6,500 ரூபாவாகவும்அத்துடன் அன்டிஜன் பரிசோதனைக்காக 2000 ரூபாவும் அறவிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்!

Leave a Reply