ஐக்கிய தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த போராட்டமானது யாழ் மாநகரசபை நுழைவாயிலின் முன்பாக இன்று காலை இடம்பெற்றது.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களான ரஜிவ் காந்தி, கிருபகரன் ஆகிய இருவருமே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மேலும் இந்தப் போராட்டமானது சபையின் உறுப்பினரான ரஜீவ் காந்தின் வட்டார பிரதிநிதியை அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் அராஜகமான செயற்பாட்டை கண்டித்து முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது