தேங்காயின் சகுணம்..!!

0

தேங்காயின் அடிப்பாகம் சிறியதாக வட்டமாக உடைந்தால் செல்வம் பெருகும்.

ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்.

சரி சமனாக உடைந்தால் துன்பம் தீரும் செல்வம் பெருகும்.

மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும்.

ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும்.

உடைக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் பொருள் இழப்புகள் ஏற்படும்.

நீளவாக்கில் உடைந்தால் தனம் அழிந்து துன்பம் உண்டாகும்.

முடிப் பாகம் இருகூறானால் தீயினால் பொருள் சேதம் ஏற்படும்.

தேங்காயை சிறு சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம் பெருகும் ஆபரண லாபம் உண்டாகும்.

மேலும் ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் நாம் வேண்டும் காரியம் வெற்றியைத் தரும்.

Leave a Reply