இலங்கையில் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ,மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை சபெய்யக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
அத்துடன் வடமேல் மாகாணத்திலும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்.
மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலயத்திற்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.
பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



