நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்புக்கு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 97,349 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய நேற்று 97,966 பேருக்கு சைனோபார்ம் 1வது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
அத்துடன் 11,058 பேருக்கு சைனோபார்ம் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
50,893 பேருக்கு அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசியும் , 30,499 பேருக்கு அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
அவ்வாறு நேற்றைய தினம் 1,308 பேருக்கு பைசர் முதலாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
இவற்றை விட 5,625 பேருக்கு நேற்றைய தினம் மொடர்னா முதலாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.



