போதைப்பொருட்களை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் நபர்களை அடையாளம் காண்பதற்கு புதிய தொழில்நுட்ப வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறி செயற்படும் சாரதிகளுக்காக அபராதம் செலுத்துவதற்கான இலகுவான வழிமுறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அபராதத் தொகை வங்கி அட்டை அல்லது வேறு முறையொன்றின் ஊடாக செலுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்படுள்ளது.
மேலும் இந்த போக்குவரத்து விதிகளை மீறி செயற்படுவர்களுக்கு அபராதத்தின் படி புள்ளிகளை குறைக்கும் முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



