தொடருந்து சேவைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம்!

0

அனைத்து தொடர்ந்து சேவைகளையும் இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தற்போது விதிக்கப்படுள்ள சுகாதார விதிமுறைகளுக்கமைய தொடருந்தில் பயணிக்கும் பொதுமக்கள் அனைவரும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று முதல் மாகாணங்களுக்கிடையில் 30 தொடருந்துகள் சேவையில் ஈடுபடடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச சேவையாளர்கள் வழமைபோன்று இன்று முதல் பணிக்கு அழைக்கப் பட்டுள்ளதால் விசேட தொடருந்து சேவைகளும் இடம்பெறவுள்ளன.

தேவை ஏற்படும் பட்சத்தில் மேலதிக தொடரூந்துகளை எதிர்வரும் நாட்களில் சேவைகளை ஈடுபடுத்தவுள்ளதாகவும் தொடர்ந்து திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply