மீண்டும் கடமைக்கு திரும்பும் அரச ஊழியர்கள்!

0

அனைத்து அரச பணியாளர்களும் இன்று முதல் வழமை போன்று தமது கடமைகளில் ஈடுபடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய விதிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி அனைத்து ஊழியர்களும் தமது கடமையில் ஈடுபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் செயலாளரால் அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணத்தினால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரச பணியாளர்கள் சுழற்சி முறையிலும் வரையறைக்கு உட்பட்ட அளவிலும் அழைத்து பணி செய்விக்கும் வகையில் விடுக்கப்பட்ட சுற்று நிருபங்கள் அனைத்தும் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply