ரிஷாட் பதியூன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினிக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் மலையகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ரிஷாட் பதியூன் வீட்டில் ஏற்கனவே மூன்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிசார் மேற்கொண்டுள்ள ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே இந்த அரசாங்கமானது பெண்களை பாதுகாக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்,
ஜனாதிபதி மாணிக்கக் கல் பற்றி கதைப்பதை நிறுத்தி விட்டு மகளீரை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர் தெரிவித்துள்ளார்.



