குத்துச்சண்டை சுற்றுப் போட்டியில் காலிறுதிக்கு தெரிவான இந்திய வீரர் சதீஷ்குமார்!

0

தற்போது குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் ரவுண்டப் ஆப் 16 சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றன.

இதற்கமைய குறித்த குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ்குமார் ஜமைக்கா வீரரை 4-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அத்துடன் ஒரு போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரெளயன் – ஐ எதிர் கொண்டார்

குறித்த போட்டியில் 4:1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அத்துடன் சதீஷ்குமார் 30-27, 30-27, 28-29, 30-27, 30-26, முதல் ரவுண்டில் 5 நடுவர்களிடமும் தலா 10 புள்ளிகளை பெற்றார்.

இரண்டாவது சுற்று மற்றும் மூன்றாவது சுற்றில் 3 வது நடுவர் தலா 9 புள்ளிகளை வழங்கினார்.

மேலும் ஆகஸ்ட் முதலாம் திகதி இடம்பெறவிருக்கும் காலிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜாலோலோவ் – ஐ எதிர் கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply