போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்னொருவர் கைது!

0

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

இதற்கமைய இவ்வாறு கைது செய்யப்பட்டட்ட பெண் ஐந்து வங்கி கணக்குகள் ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யபட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 41 வயதினையுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தப் பெண்ணிடம் காணப்பட்ட வங்கி கணக்குகளில் 600 கோடி ரூபாவிற்கு அதிகமான பணம் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை மத்திய வங்கியின் நீதி விசாரணை பிரிவு வழங்கிய தவலின் அடிப்படையில் குறித்தபெண் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply