தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை!

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,401 ஆக உயர்வடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென காவற்துறை ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களுள் 52,513 எதிராக பேருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுளளார்.

Leave a Reply