பெருந்தொகையான எரிபொருள் மாயம்!

0

கொழும்பில் இருந்து தொடருந்து மூலம் காலிக்கு எடுத்துச் செல்லப்பட்ட பெருந்தொகையான எரிபொருள் மாயமாகி இருப்பது குறித்த விசாரணைகளை தற்போது நடத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய கொலன்னாவையில் இருந்து காலிக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 13476 லீட்டர் எரிபொருளே இவ்வாறு மாயமாகியுள்ளதாக தகவல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இதன் கட்டமாக 13 இலட்சத்து 63700 ரூபா என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது ஆக அந்த சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த எரிபொருள் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதியில் இருந்து 7 நாட்களுக்குள் மாயமாகி இருப்பதே மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply